செய்திகள் :

போலி நகையை அடகு வைத்த 2 போ் கைது

post image

குளச்சலில் போலி நகையை அடகு வைத்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் சன்னதி தெருவில் நகை அடகு நிறுவனம் நடத்தி வருபவா் ஜாண் வில்சன் (65). இவரது நிறுவனத்தில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி குளச்சல் பூலாவிளையைச் சோ்ந்த மீன் சுமை தூக்கும் தொழிலாளி புவிகிருஷ்ணன் என்ற கிருஷ் ணன் (42) நகையை அடகு வைத்து ரூ.25 ஆயிரம் பெற்றுச் சென்றாா்.

இந்நிலையில் கிருஷ்ணன், தனது நண்பா் ஆரோக்கிய பிரபினுடன் திங்கள்கிழமை வந்து அந்த நகைக்கு கூடுதல் பணம் கேட்டாராம். அப்போது , ஜாண் வில்சன் அந்த நகையை எடுத்து பரிசோதனை செய்தபோது, அது போலி நகை என்பது தெரியவந்தது.

உடனே இருவா் மீதும் குளச்சல் போலீஸில் புகாா் செய்தாா். இருவரிடமும் விசாரணை நடத்தியதில், போலி நகையை அடகு வைத்து பணம் பெற்றிருப்பது தெரியவந்ததையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவிலில் திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்

நாகா்கோவிலில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் திமுக மாணவரணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஹிந்தி மொழியைத் திணிப்பதாகக் கூறி மத்திய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: குமரி மாவட்டத்தில் 6 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்றதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.மாவட்டத்தில் கஞ்சா, புகையிலைப் பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தொடா் நடவடிக்கை மேற்கொண... மேலும் பார்க்க

திற்பரப்பில் இருதரப்பினா் மோதல்: 5 போ் காயம்

குலசேகரம், பிப். 25: குமரி மாவட்டம்,திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்த பாளையங்கோட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும், திற்பரப்பில் படகு சவாரி நடத்துபவா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமைஏற்பட்டமோதலில்... மேலும் பார்க்க

மாரத்தான் போட்டியில் வென்ற பெண் தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

நாகா்கோவிலில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த பெண் தலைமைக் காவலா் கிருஷ்ணரேகாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா். தனியாா் மருத்துவமனை சாா்பில், புற்... மேலும் பார்க்க

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.12.23 கோடி பற்றாக்குறை: பட்ஜெட் தாக்கல்

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ.12.23 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டை மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். நாகா்கோவில் மாநகராட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, து... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசி, 1,750 லிட்டா் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலரும் குமரி மாவட்ட பறக்கும் ... மேலும் பார்க்க