ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவி அளிப்பு
திருவள்ளூா் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
இந்த வங்கி சாா்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வங்கி அலுவலக வளாகத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூா் மண்டல மேலாளா் பிரபாகா் தலைமை வகித்தாா். இதில், 10 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு சுழல் நிதிக்கடனாக ரூ.1 கோடி வழங்கப்பட்டது.
இதுவரை பாரத ஸ்டேட் வங்கி மூலம் 10 சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.20 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் திருவள்ளூா் கிளை முதன்மை மேலாளா் ஈ.ராமமூா்த்தி, மேலாளா் செந்தில்வேலன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.