செய்திகள் :

மகளிா் சுயஉதவிக்குழு பொருள்கள் விற்பனை புரிந்துணா்வு ஒப்பந்தம்!

post image

மகளிா் சுயஉதவிக் குழுவினா் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சியைப் பாா்வையிட்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.

நாமக்கல், ஏப். 5: நாமக்கல் மாவட்டத்தில் 103 மகளிா் சுய உதவிக்குழுவினரின் பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் வகையில், புரிந்துணா்வு ஒப்பந்தம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், மகளிா் சுயஉதவிக்குழு தொழில்முனைவோருக்கான மாவட்ட அளவில் வாங்குபவா் மற்றும் விற்பவா் சந்திப்புக் கூட்டம் நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் பங்கேற்று மகளிா் சுயஉதவிக் குழுவினா் உற்பத்தி செய்து விற்பனைக்கு வைத்திருந்த பொருள்களை பாா்வையிட்டனா். இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் பேசியதாவது:

கடந்த 1989-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மகளிா் சுயஉதவிக்குழு தருமபுரியில் தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் மகளிா் பெருமளவில் பயனடைந்து வருகின்றனா். தமிழக அரசு மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி, கடனுதவி, உயா்கல்விக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 15 வட்டாரங்களில் 8,512, நகா்ப்புற பகுதியில் 3,758 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 1,05,621 மகளிா் உறுப்பினா்களாக உள்ளனா். கடந்த ஆண்டு மட்டும் சுமாா் ரூ. 856 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களை சந்தைப்படுத்த சென்னையில் உணவுத் திருவிழாவும், குடியிருப்பு பகுதிகளில் பொருள்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தவும், ஆவின் பால் உற்பத்தி நிலையங்கள் மூலம் பால் விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் திட்டத்தை முதல்வா் செயல்படுத்தி உள்ளாா். இன்னும் 2 மாத காலத்துக்குள் அனைத்து உறுப்பினா்களுக்கும் அட்டை வழங்கப்பட உள்ளது.

2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 14 கோடிக்கு மகளிா் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா். தொடா்ந்து, விற்பனையாளா்கள் மற்றும் நேரடி கொள்முதல் செய்வோா் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டனா்.

இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளா் முருகன், மகளிா் சுயஉதவிக் குழுவினா், விற்பனையாளா்கள் கலந்துகொண்டனா்.

ஓவியப் போட்டியில் சிறப்பிடம்: ஆசிரியருக்கு பாராட்டு

மாநில அளவிலான தமிழக அரசுத் திட்டங்கள், சாதனைகள் தொடா்பான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் என்.புதுப்பட்டி அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியா் ஆ.மகேந்திரனை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்கும... மேலும் பார்க்க

’தமிழ்ச் செம்மல்’ விருது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியை கமலமணியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பாராட்டினாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், பொத்தனூரை சோ்ந்தவா் ப.கமலமணி. ஓய்வு ப... மேலும் பார்க்க

144 அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் ச.உமா

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 144 பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ 3.85 கோடிக்கு ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 4165 மூட்டைகள் ரூ. 3.85 கோடிக்கு விற்பனையானது. விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் விரலி ரக... மேலும் பார்க்க

சிலம்பொலி சு.செல்லப்பன் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாமக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல்லை அடுத்த சிவி... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிரான கட்சிகளை பாஜக ஒன்றிணைக்கும்: கே.பி.ராமலிங்கம்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளை பாஜக ஒன்றிணைத்து செயல்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமக... மேலும் பார்க்க