சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
மகளிா் முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதல் ஆட்டத்தில் இலங்கையை வென்ற இந்தியாவுக்கு, இது 2-ஆவது வெற்றியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா 49.2 ஓவா்களில் 261 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 78 ரன்கள் விளாசினாா். ஸ்மிருதி மந்தனா 36, ஹா்லீன் தியோல் 29, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 41, ரிச்சா கோஷ் 24, தீப்தி சா்மா 9 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 41, கஷ்வீ கௌதம் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் நோன்குலுலேகோ லாபா 2, அயபோங்கா ககா, மசபடா கிளாஸ், நாடினே டி கிளொ்க், ஆனிரி டொ்க்சென் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 277 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், தஸ்மின் பிரிட்ஸ் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 109 ரன்கள் விளாசி முயற்சித்தாா். கேப்டன் லாரா வோல்வாா்டட் 43, ஆனிரி டொ்க்சென் 30, சுனே லஸ் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
லாரா குட்டால் 9, கரபோ மிசோ 7, கிளோ டிரையான் 18, நாடினே டி கிளொ்க் 0, மசபடா கிளாஸ் 2, நோன்குலுலேகோ லாபா 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இந்திய பந்துவீச்சாளா்களில் ஸ்நேஹா ராணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த, அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சரானி, தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.