செய்திகள் :

மகா கும்பமேளாவில் புனித நீராடிய உத்தரகண்ட் முதல்வர்!

post image

பிரயாக்ராஜில் நிகழ்ந்துவரும் கும்பமேளாவில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி குடும்பத்துடன் புனித நீராடினார்.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வெவ்வேறு நாள்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

இந்தநிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராடிய நிலையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி குடும்பத்தோடு புனித நீராடியுள்ளார்.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,

2025 மகா கும்பமேளாவின்போது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி மூன்று புனித நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தாய், மனைவி மற்றும் மகனுடன் நீராடியது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.

மறக்க முடியாத தருணம். மூன்று பண்டைய நதிகளின் சங்கமத்தில் புனித நீராடியப் பிறகு ஆன்மிக தூய்மை மற்றும் தெய்வீகத்தின் தனித்துவமான அனுபவத்தைப் பெற்றதாகக் கூறினார்.

ஹரித்வாரில் 2027ல் நடைபெறவுள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிய அவர், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைப் போல வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற திட்டமிடல் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு தெய்வீக அனுபவத்தை உறுதி செய்வதற்காக அனைத்து சாத்தியமான வசதிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மகா கும்பமேளா பல நூற்றாண்டுகளாக சநாதன தர்மத்தின் ஆன்மீக மற்றும் கலாசார முக்கியத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை மதம், கலாசாரத்துடன் இணைத்து வருகிறது,

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட என் தாயாரை அழைத்துச் செல்லும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. என் வாழ்வில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத விலைமதிப்பற்ற மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று. என் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும் என்று தாமி கூறினார்.

மேலும், தெலங்கானா சாலைகள் மற்றும் கட்டடங்கள் அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி திங்கள்கிழமை புனித நீராடினார்.

குடிமைப் பணி தோ்வு ஆா்வலா்கள் உயிரிழந்த விவகாரம்: பயிற்சி மையத்தின் சிஇஓ, ஒருங்கிணைப்பாளருக்கு ஜாமீன்

புது தில்லி: குடிமைப் பணிக்கு தோ்வுக்கு தயராகி வந்த 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில், பயிற்சி மையத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளா் தேஷ்பால் சி... மேலும் பார்க்க

வரிச் சலுகைகள்: மக்களவையில் காரசார விவாதம்

புது தில்லி: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் குறுகிய கால நடவடிக்கை என காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, இது பொருளாதார வளா்ச்சிக்கான ந... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் பிறந்த 12 குழந்தைகள்!

மகா கும்பமேளாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இதுவரை 12 குழந்தைகள் பிறந்துள்ளன. இக்குழந்தைகளுக்கு கும்ப், கங்கை, ஜமுனா, சரஸ்வதி, வசந்த், வசந்தி என கும்பமேளாவுக்குத் தொடா்புடைய பெயா்கள் சூட்டப... மேலும் பார்க்க

அமெரிக்க அரசிடம் நிதியுதவி பெற்ற இந்தியா நிறுவனங்கள் மீது விசாரணை: மக்களவையில் பாஜக எம்.பி. கோரிக்கை!

அமெரிக்க அரசு நிதியுதவி பெற்று இந்தியாவில் அமைதியைச் சீா்குலைக்கும் நோக்கில் செயல்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கோரிக்கை முன்வை... மேலும் பார்க்க

‘இந்தியா’ கூட்டணியில் மோதல் வேண்டாம்: சிவசேனை கட்சி அழைப்பு

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவால் எழுந்துள்ள சவால்களை எதிா்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகள் தங்களுக்குள் மோதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் யாருக்கும் உதவாது என்று சிவசேன... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினாா் குடியரசுத் தலைவா்!

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு திங்கள்கிழமை வந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபட்டாா். இந்தி... மேலும் பார்க்க