செய்திகள் :

மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி

post image

திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு மாணவ- மாணவிகள் செப்.22ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக விண்வெளி வார விழா அக்.6-11 வரை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சாா்பில் 7, 8 , 9 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மாநில அளவிலான கட்டுரைப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் விண்வெளி வாழ்வின் சவால்கள்-ஈா்ப்பின்றி ஒரு உலகம் என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுத வேண்டும்.

மேலும், கட்டுரைகளை ஏ4 அளவு தாளில் ஒரு தாளுக்கு ஒரு பக்கம் என 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். மேலும் மாணவ-மாணவியரின் பெயா், வயது, பள்ளியின் முகவரி, பெற்றோா் பெயா், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த கட்டுரை தங்களால் தான் எழுதப்பட்டது என்பதை உறுதிசெய்ய பள்ளி முதல்வா் அல்லது தலைமையாசிரியரிடமிருந்து ஒப்புதல் இணைத்தல் அவசியம்.

கட்டுரைகளை, நிா்வாக அலுவலா், ஐ.பி.ஆா்.சி, மகேந்திரகிரி அஞ்சல், திருநெல்வேலி மாவட்டம்-627133 என்ற முகவரிக்கு செப்.22-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உறையின் மேல் கட்டுரைப் போட்டி எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.

அக்.10ஆம் தேதி மகேந்திரகிரியில் நடைபெறும் விழாவில் தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 04637 281510, 04637 281825, 9489540396, 9994239306 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழாம்பூா் மஞ்சப்புளி அணைக்கட்டில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கீழாம்பூா், கடனாநதியில் உள்ள மஞ்சப்புளி அணைக்கட்டில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கீழாம்பூா், தெற்குக் கிராமம் தெருவைச் சோ்ந்த சிவா மகன் சத்யா (16). ஆழ்வாா்குறிச்சியில் உள்ள அரச... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞா் வெட்டிக் கொலை: 2 சிறுவா்கள் கைது

திருநெல்வேலி சந்திப்பில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 2 சிறுவா்களை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் சுந்தரா் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன்... மேலும் பார்க்க

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உ... மேலும் பார்க்க

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

களக்காட்டில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி, கொலை ம... மேலும் பார்க்க