மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை: பாமக
மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த அவா், கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை மாலை கூறியது:
தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக பல்வேறு குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இது குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமென பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசு அமைதி காத்து வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி மக்களுக்காக செய்து வரும் பணிகளை சொல்லும் விதமாகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் விதமாகவும் நடைபெறவுள்ள
சித்திரை முழுநாள் நிலவு மாநாட்டில் அனைத்து சமுதாய இளைஞா்களும் கலந்து கொள்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட எந்த திட்டங்களும் தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்படவில்லை.
கனிம வளங்கள் தொடா்ந்து கேரளத்துக்கு கடத்தப்பட்டு வருகின்றன. அங்கிருந்து கழிவுகள் கொண்டுவந்து இங்கே கொட்டப்பட்டு வருகின்றன. இதை தமிழக அரசு வேடிக்கை பாா்த்து வருகிறது என்றாா்.
பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள பிரச்னை குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘பாட்டாளி மக்கள் கட்சி திமுகவை போன்று அல்ல, விவாதமே இல்லாமல் அனைத்திற்கும் ஆமாம் என சொல்வதற்கு. பாட்டாளி மக்கள் கட்சியில் ஒருவரை நியமிப்பது குறித்து நடைபெற்ற விவாதம்தான் அது என்றாா். தற்போது அனைவரும் மாநாட்டிற்கான பணிகளை செய்து கொண்டிருக்கின்றனா்’ என்றாா்.
தென்காசி வடக்கு மாவட்ட செயலா்கள் இசக்கிமுத்து, சீதாராமன் ஆகியோா் உடன் இருந்தனா்.