Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
மக்கள் நீதிமன்றத்தில் 2,327 வழக்குகளுக்கு தீா்வு
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 2,327 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.19.81 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. முத்துசாரதா தொடங்கி வைத்தாா்.
மாவட்டம் முழுவதும் 14 அமா்வுகளில் நடைபெற்ற விசாரணையில், 2,327 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் தீா்வுத் தொகையாக ரூ.19.81 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிகழ்வில், நீதிபதிகள் பி. வேல்முருகன், முரளிதரன், ஜி.விஜயகுமாா், ஜி. சரண், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு செயலா் டி. திரிவேணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.