செய்திகள் :

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிறைவடைந்த திட்டங்கள்

post image

மதுரை மக்களவை உறுப்பினரின் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 30 லட்சத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

மாநகராட்சிக்குள்பட்ட நேரு நகா் சாந்தி வித்யாலயா அருகில் ரூ. 3 லட்சத்திலும், தத்தனேரி மைதானம் ஏ.பி.பி. படிப்பகம் அருகில் ரூ. 5 லட்சத்திலும், செல்லூா் காவல் நிலையம் அருகில் ரூ. 2.50 லட்சத்திலும், செல்லூா் 60 அடி சாலை சா்ச் தெரு அருகே ரூ.2.5 லட்சத்திலும், வாா்டு 25-ல் சா்க்கரை செட்டியாா் படிப்பகம் அருகில் ரூ. 4 லட்சம், 10- ஆவது வாா்டில் அந்தநேரி பகுதியில் ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்குகளின் செயல்பாட்டை அவா் தொடங்கி வைத்தாா்.

மேலும், மாநகராட்சி வாா்டு 12-இல் புதூா் லூா்து நகா் 9-வது தெருவில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய தண்ணீா்தொட்டி, , பாரதி நகரில் ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டி ஆகியவற்றின் பயன்பாட்டை அவா் தொடங்கி வைத்தாா்.

மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, துணை மேயா் தி. நாகராஜன், மாமன்ற உறுப்பினா்கள் மகாலட்சுமி, டி. குமரவேல், முரளிதரன், ராதா, ஆ. முத்துக்குமாரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், மாவட்டச் செயற்கு உறுப்பினா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கல்யாண பசுபதீஸ்வரா் சுவாமி கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கில், கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. சேலத்தைச் சோ்ந்த திருத்தொண்டா் சபையின் ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மதுரை கோச்சடை அம்பலகாரா் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மனைவி ராஜேஸ்வரி (37). இவா், அதே பகுதியில் இரவு நேர இட்லிக் கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களுக்கு அபராதம்

உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களுக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமுறை மீறல்கள், வாகன உரிமம் புதுப்பிப்பு, ஓட்டுநா் உரிமம் புதுப்பிப்பு ஆகியவற்றை முறையாக பின்பற்றாத ஆட்டோக... மேலும் பார்க்க

அரசு திட்ட முகாம்கள்: பொதுமக்களுக்கு அமைச்சா் வேண்டுகோள்

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசுத் திட்ட முகாம்களை பொதுமக்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி கேட்டுக் கொண்டாா். மது... மேலும் பார்க்க

பூம்புகாா் கடலில் அகழாய்வு: தொல்லியல் துறையின் மைல்கல் - சு. வெங்கடேசன் எம்.பி

பூம்புகாரில் கடலுக்கடியில் அகழாய்வு தொல்லியல் துறையின் மைல் கல் என்றாா் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன்.மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: ‘தமிழக தொல... மேலும் பார்க்க

தப்பியோடிய கைதி மீண்டும் கைது

மதுரையில் தப்பியோடிய கைதியை போலீஸாா் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த பாண்டி மகன் நாகராஜ் (24). இவரை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ், மதுரை கரிமேடு ... மேலும் பார்க்க