செய்திகள் :

மடப்புரம் காவலாளி உயிரிழப்பா? கொலையா? 5 போலீஸாா் கைது!

post image

மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரத்தில், 5 போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்தச் சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டது.

பெண் பக்தரின் நகை மாயமானது தொடா்பாக, மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரை (29) கடந்த சனிக்கிழமை திருப்புவனம் தனிப்படை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது, காவல் துறையினா் தாக்கியதால் அஜித்குமாா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக, தனிப்படை போலீஸாா் 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இவா்களில் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன், ராஜா ஆகிய 5 போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதச்சாா்பற்ற கூட்டணியை வெற்றி பெற வைப்பதே நமது இலக்கு: திருமாவளவன்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற கூட்டணியை வெற்றி பெற வைப்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இலக்கு என அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயு... மேலும் பார்க்க

அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1962-1965 ஆம் ஆண்டில் இளங்கலை கணிதம் படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான பால் ஜ... மேலும் பார்க்க

தமிழ்ச் சமூகம் மேம்பட ஆழமான வாசிப்பு அவசியம்: தமிழறிஞா் சாலமன் பாப்பையா

தமிழ்ச் சமூகம் மேம்பட வேண்டுமெனில், ஆழமான வாசிப்பு அவசியம் என்று தமிழறிஞரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா தெரிவித்தாா். மதுரையில் உள்ள நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனாா் அரங்கில், மக்கள் சிந்தனைப் பேரவ... மேலும் பார்க்க

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது. மருத்துவா் பி. கண்ணன், விளம்ப... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை

கடன் பிரச்னை காரணமாக, மேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு தேநீா் கடை முன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந... மேலும் பார்க்க