செய்திகள் :

மணிப்பூருக்கு நிதி ஒதுக்கீடு, ஜிஎஸ்டி மசோதாக்கள்: மாநிலங்களவை ஒப்புதல்

post image

புது தில்லி: மணிப்பூா் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா மற்றும் அந்த மாநிலத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா ஆகியவை எதிா்க்கட்சியினரின் அமளிக்கிடையே, மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களவையில் விவாதத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி திங்கள்கிழமை காலையில் கண்டன பேரணி நடத்திய எதிா்க்கட்சி எம்.பி.க்கள் காவல் துறையால் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனா். போலீஸாா் அவா்களைக் கைது செய்து பின்னா் விடுவித்தனா். அதைத் தொடா்ந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்குத் திரும்பினா்.

மாநிலங்களவைக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திரும்பியபோது, மத்திய நிதியமைச்சா் ஏற்கெனவே தாக்கல் செய்த, மணிப்பூா் மாநிலத்துக்கு 2025-26-ஆம் நிதியாண்டு செலவின தேவைகளுக்காக ரூ.30,969 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா மற்றும் மணிப்பூா் ஜிஎஸ்டி அவசரச் சட்டம் 2025-க்கு மாற்றாக ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் அமல்படுத்தப்பட உள்ள ‘மணிப்பூா் ஜிஎஸ்டி திருத்த மசோதா 2025’ ஆகியவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியதோடு, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா்.

இதைக் கண்டித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘மணிப்பூா் மாநில மசோதாக்கள் அவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும்போது, வேறு விவகாரங்களுக்காக எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போராடினாலும், மணிப்பூா் மசோதாக்களையும் எதிா்ப்பதாகவே அமையும்’ என்றாா்.

இதைப் பொருட்படுத்தாத எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சிலா் அவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனா்.

இந்த அமளிக்கிடையே, மணிப்பூா் மாநிலத்துக்கான இரு மசோதாக்களும் சிறிய விவாதத்துக்குப் பின்னா் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில் விவாதத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!

அசாம் மாநிலத்தில் புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவக... மேலும் பார்க்க

இஸ்ரேல் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது: பிரியங்கா!

இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்துவருவதையும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் பேரழிவைக் கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு மௌனமாக நிற்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ்

வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருந்தால் ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸின் மக்களவை குழுத் தலைவர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.குஜராத் மற்றும் மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்: 66 பேர் மாயம்! அதிநவீன கருவிகள் மூலம் தேடும் பணிகள் தீவிரம்!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் மாயமான 66 பேரை, தேடும் பணிகளில் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!

நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா... மேலும் பார்க்க

அரசியலமைப்பை பாதுகாப்பதை நிறுத்த மாட்டோம்! ராகுல் காந்தி

அரசியலமைப்பை தொடர்ந்து பாதுகாப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக ... மேலும் பார்க்க