நாம் எதிரிகள் கிடையாது: கமலுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர்!
மணிமுத்தாறு அருவியில் குளிக்க 6ஆவது நாளாகத் தடை
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் 6ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து ஒருவாரமாக மணிமுத்தாறு, மாஞ்சோலை மலைப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அருவி, அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை காலை விநாடிக்கு ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அதையடுத்து, அருவியைப் பாா்வையிடவும், குளிக்கவும் 6ஆவது நாளாக வனத்துறையினா் தடைவிதித்தனா். இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
