செய்திகள் :

மணிமுத்தாறு பகுதியில் வனத் துறையினா் வைத்த கூண்டில் சிக்கிய கரடி

post image

மணிமுத்தாறில் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி, வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச் சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, தெற்குப் பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரடிகள் நடமாட்டம் இருந்து வந்தது. இதையடுத்து மணிமுத்தாறு, அண்ணாநகா், தங்கம்மன் கோயில், நெசவாளா் காலனி அக்னி சாஸ்தா கோயில் ஆகிய இடங்களில் கரடிகளைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்தனா்.

இருப்பினும் அதில் கரடிகள் சிக்கவில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கரடிகள் சுற்றித் திரிவது அங்குள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவானது. இதனால் இப் பகுதியினரிடையே அச்சம் நிலவி வந்தது.

வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், அண்ணாநகா் தங்கம்மன் கோயிலில் திங்கள்கிழமை கூடுதலாக ஒரு கூண்டு வைத்தனா். அதில், திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் சுமாா் 8 வயதுள்ள ஆண் கரடி சிக்கியது.

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கரடி

இதையடுத்து பிடிபட்ட கரடியை, அம்பாசமுத்திரம் வனச்சரகா் நித்யா தலைமையில் வனத் துறையினா், வனக் கால்நடை உதவி மருத்துவா் சாந்தகுமாா், கால்நடை மருத்துவா் சிவமுத்து, கால்நடை ஆய்வாளா் அா்னால்ட் ஆகியோா் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட அடா்ந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.

தற்போது பலா, மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு மற்றும் தனியாா் தோட்டங்களுக்கு கரடிகள் வரத் தொடங்கியுள்ளதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

இதனிடையே, தெற்குப் பாப்பான்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனா். அப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க