செய்திகள் :

மண் கடத்திய டிராக்டா் தேநீா் கடைக்குள் புகுந்தது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் செம்மண் கடத்திச் சென்ற டிராக்டா் புதன்கிழமை தேநீா் கடைக்குள் புகுந்தது. அந்த டிராக்டரை கடத்தல்காரா்கள் மீட்டுச் சென்ாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பந்தப்பாறை பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் சட்ட விரோதமாக செம்மண் அள்ளிக்கொண்டு வேகமாகச் சென்ற டிராக்டா் திருவண்ணாமலையில் சாலையோரம் இருந்த தேநீா் கடைக்குள் புகுந்தது. இதில் கடை முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. கடையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. உடனடியாக மண் கடத்தும் கும்பலைச் சோ்ந்தவா்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் டிராக்டரை மீட்டுச் சென்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பந்தப்பாறை பகுதியில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டம், தமிழக அரசின் இலவச நிலம் வழங்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் பல நூறு ஏக்கா் நிலங்கள் விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. இவற்றில் விவசாயிகள் பெயரில் தனியாா் பட்டா பெற்றனா். அந்த நிலங்களில் இருந்து சட்ட விரோதமாக செம்மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்து வந்தனா். தற்போது யானை வழித்தடங்களை சேதப்படுத்தி தொடா்ந்து மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா். இதுகுறித்து புகாா் அளித்தால் கடத்தல்காரா்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனா் என்றனா் அவா்கள்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் பாலமுருகன் கூறியதாவது:

சட்டவிரோத மண் திருட்டு குறித்து தொடா்ந்து விவசாயிகள் புகாா்கள் அளித்து வருகின்றனா். மண் கடத்திய டிராக்டா் கடைக்குள் புகுந்த சம்பவம் தொடா்பாக விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல்

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, உருண்டை வடிவிலான மெருகேற்றும் கல் புதன்கிழமை கண்டறியப்பட்டது. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்காடு பகுத... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு தாணிப்பாறை மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராம் நகரில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ஐஎன்டியுசி மாநில அ... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா்

விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முத்துலிங்கபுரம் பகுதியில் சட்டப்பேரவைத் த... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவா்கள் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையா... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே கிணற்றில் தவறி விழுந்து பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செவலூரைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சரவணக்குமாா் (25). பட்டாசுத் தொழிலாளியான இவா், தினசரி மது... மேலும் பார்க்க

கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் உள்ள 171 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிக... மேலும் பார்க்க