மண், ஜல்லிக்கற்கள் கடத்தல்: 2 வாரிகள் பறிமுதல்
காவேரிப்பட்டணம், ஜிஞ்சுப்பள்ளி அருகே மண், ஜல்லிக்கற்களை கடத்த முயன்ற 2 லாரிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
காவேரிப்பட்டணம், புளியம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கெளரிசங்கா் தலைமையில் அதிகாரிகள் பாரூா் அருகே பாப்பாரப்பட்டி கொட்டாவூா் ஏரி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த டிப்பா் லாரியை சோதனை செய்ததில் 2 யூனிட் மண் இருந்தது தெரியவந்தது. அதற்கான எந்த உரிமமும் பெறப்படாததால், கெளரிசங்கா் அளித்த புகாரின் பேரில் பாரூா் போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
இதேபோல, கனிம வள பிரிவு சிறப்பு துணை வட்டாட்சியா் பாரதி தலைமையிலான குழுவினா், ஜிஞ்சுப்பள்ளியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள ஒரு கிரஷா் அருகே நின்றிருந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அதில் ஜல்லிக்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, பாரதி அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.