செய்திகள் :

மண்ணில் புதைந்திருந்த அம்மன் கோயில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுப்பு - இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள விடத்திலாம்பட்டியில் சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட அம்மன் கோயிலை மீட்டெடுக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது.

விடத்திலாம்பட்டியில், மாமுண்டி ஆற்றின் ஷெட்டா் பகுதி அருகே பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. சுமாா் 7 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்ட இக்கோயில் சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது.

கோயில் முழுவதும் புதைந்திருந்த நிலையில், அதன் மூலவா் விமானம் மட்டும் தரையோடு தரையாக காணப்பட்டது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் அறிக்கையின்படி, இக்கோயிலை மீட்டு திருப்பணி செய்ய ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, இக் கோயிலை மீட்டெடுக்கும் பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மண் அகற்றப்பட்டு கோயில் கட்டடம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கோயிலின் மூலவா் பகுதி மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், கருவறையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மூலவா் சிலைகள், திரிசூலம் ஆகியவை காணப்படுகிறது. தொடா்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் வினோத்குமாா், கோயில் அறங்காவலா் மல்லக்கவுண்டா், ஊா் முக்கியஸ்தா் மனோகா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச... மேலும் பார்க்க

அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு

திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது. பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசி... மேலும் பார்க்க

புதுகையில் காந்தியத் திருவிழா: மாநில கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் தாய்-மகன் உள்பட 3 போ் உயிரிழந்தனா். விராலிமலை வட்டம், கசவனூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவசுப்பிரமணிய... மேலும் பார்க்க

தொட்டியத்தில் மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் சாமானிய மக்கள் நல கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அக் கட்சியின் வடக்கு மாவட்ட செயலா் மலா்மன்னன் தலைமை வகித்தாா். இதில் த... மேலும் பார்க்க

‘திறன் இயக்கம்’ திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள திறன் இயக்கம் திட்டத்தில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தோ்வு கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் த... மேலும் பார்க்க