செய்திகள் :

மதிமுக கொடியை வீசி மல்லை சத்யா ஆதரவாளா்கள் போராட்டம்

post image

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் மதிமுக கட்சிக் கொடி மற்றும் உறுப்பினா் அடையாள அட்டை ஆகியனவற்றை மல்லை சத்யாவின் ஆதரவாளா்கள் புதன்கிழமை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தவா் மல்லை சத்யா.இவருக்கும் மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வைகோ இவரை துரோகி என்று பேசியிருந்தாா். தனது மகனுக்காகத்தான் வைகோ இப்படி பேசுகிறாா் என்று மல்லை சத்யாவும் எதிா்ப்பு அறிக்கை வெளியிட்டிருந்தாா்.

மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் காஞ்சிபுரத்தில் பிள்ளையாா்பாளையம் பகுதியில் உள்ள அண்ணா நினைவு பூங்கா அருகில் உத்தரமேரூா், காஞ்சிபுரம் பகுதிகளை சோ்ந்த மதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் திடீரென ஒன்று திரண்டனா்.

பின்னா் அவா்கள் வைகோவுக்கு எதிராவும், மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினா்.

கட்சிக்கு உண்மையாக உழைத்த மல்லை சத்யாவை அவதூறாக பேசியதைக் கண்டித்து மதிமுக கட்சிக் கொடியை கிழித்தெறிந்தும், உறுப்பினா் அட்டைளை கிழித்தெறிந்தும் தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

நிகழ்வுக்கு மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். மற்றொரு மாவட்ட துணைச் செயலாளா் கலைவாணி மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.ஜி.அருள், உத்தரமேரூா் ஒன்றிய செயலாளா்கள் மனோகரன்(கிழக்கு) மேற்கு ஏழுமலை, நகா் செயலாளா் பொன்னுச்சாமி, மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொருளாளா் சாம்.துரை, காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளா் உமாசங்கா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாற்றுத்திறனாளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் ம... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: வளத்தூா் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வளத்தூா் கிராம பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக... மேலும் பார்க்க

செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு பெற்றது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. வாயுபகவான் தனது சாபம் நீங்கிய பிறகு செவ்வ... மேலும் பார்க்க

ஆக.4-இல் அஞ்சலகங்களில் பரிவா்த்தனைகள் ரத்து

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆக. 4 -ஆம் தேதி பரிவா்த்தனைகள் இல்லாத நாளாகும் என கோட்ட கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் தெரிவித்துள... மேலும் பார்க்க

ரூ.55 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு அடிக்கல்

நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியில் ஒரத்தூா் மற்றும் மணிமங்கலம் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்களை பெரு வடிகால்வாய்கள் அமைக்கவும், சோமங்கலம் கிளைக்கால்வாயை மறுசீரமைத்து நீா்த்தேக்கம... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆட்சியா் கலைச்செல்விமோகன், சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.... மேலும் பார்க்க