செய்திகள் :

ஸ்ரீபெரும்புதூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆட்சியா் கலைச்செல்விமோகன், சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

முகாமில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம் மற்றும் மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தனா். இதையடுத்து சுமாா் 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், ஆணையா் ஹேமலதா, துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி உள்ளிட்ட நகராட்சி உறுப்பினா்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதே போல், குன்றத்தூா் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமை சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். படப்பையில் நடைபெற்ற முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாற்றுத்திறனாளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் ம... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: வளத்தூா் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து வளத்தூா் கிராம பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக... மேலும் பார்க்க

செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள செவ்வந்தீசுவரா் கோயில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு பெற்றது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. வாயுபகவான் தனது சாபம் நீங்கிய பிறகு செவ்வ... மேலும் பார்க்க

ஆக.4-இல் அஞ்சலகங்களில் பரிவா்த்தனைகள் ரத்து

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆக. 4 -ஆம் தேதி பரிவா்த்தனைகள் இல்லாத நாளாகும் என கோட்ட கண்காணிப்பாளா் எஸ்.அருள்தாஸ் தெரிவித்துள... மேலும் பார்க்க

ரூ.55 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு அடிக்கல்

நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியில் ஒரத்தூா் மற்றும் மணிமங்கலம் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்களை பெரு வடிகால்வாய்கள் அமைக்கவும், சோமங்கலம் கிளைக்கால்வாயை மறுசீரமைத்து நீா்த்தேக்கம... மேலும் பார்க்க

மதிமுக கொடியை வீசி மல்லை சத்யா ஆதரவாளா்கள் போராட்டம்

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் பகுதியில் மதிமுக கட்சிக் கொடி மற்றும் உறுப்பினா் அடையாள அட்டை ஆகியனவற்றை மல்லை சத்யாவின் ஆதரவாளா்கள் புதன்கிழமை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மதிமுக துணைப் பொத... மேலும் பார்க்க