செய்திகள் :

மதுரை மத்திய சிறையில் கோழி இறைச்சி விற்பனை

post image

மதுரை மத்திய சிறை வளாகத்தில் இயங்கி வரும் சிறைச் சந்தையில் கோழி இறைச்சி விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட ஆண் கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் உள்ளனா். இதில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள், சிறை வளாகத்தில் இயங்கும் சிறைச் சந்தையில் விற்கப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து கைதிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

இதன்படி, மதுரை மத்தியச் சிறையில் 6 பிராய்லா் கோழிப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. இந்தப் பண்ணைகள் மூலம் கிடைத்த கோழி இறைச்சியின் விற்பனை சிறைச் சந்தையில் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

மத்தியச் சிறையில் உள்ள 6 கோழிப் பண்ணைகள் மூலம் வாரத்துக்கு 2 ஆயிரம் கிலோ இறைச்சி கிடைக்கிறது. இதில், மத்தியச் சிறைக் கைதிகளின் உணவுத் தேவைக்காக வாரந்தோறும் 750 கிலோ இறைச்சியும், பெண் கைதிகள், தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரத்தில் மாவட்ட சிறைக் கைதிகளின் உணவுத் தேவைக்காக 250 கிலோ இறைச்சியும் வழங்கப்படுகிறது.

எஞ்சிய ஆயிரம் கிலோ இறைச்சியை மத்தியச் சிறை அங்காடி மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு, கோழி இறைச்சி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வெளிச் சந்தையைவிட 30 சதவீதம் குறைவான விலைக்கு கோழி இறைச்சி விற்கப்படுகிறது. இந்தப் பணியில் 10-க்கும் மேற்பட்ட கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முதல் நாளான புதன்கிழமை 350 கிலோ கோழி இறைச்சி விற்பனையானது. இந்தச் சந்தையில் அனைத்து நாள்களிலும் கோழி இறைச்சி விற்கப்படும்.

இங்கு இறைச்சி வாங்க விரும்புவோா் 0452-2360034, 2360031 என்ற எண்களில் சிறை நிா்வாகத்தைத் தொடா்பு கொள்ளலாம். தொகையை கியூ ஆா் கோடு மூலம் செலுத்தலாம் என்றனா்.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க