செய்திகள் :

மதுவால் விபரீதம் - தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை

post image

மது அருந்தியதைக் கண்டித்த தம்பியை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு கமலா நகரைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மகன்கள் சங்கா் (32), தினேஷ் (20). இருவரும் கட்டடத் தொழிலாளா்கள். சங்கருக்குத் திருமணமாகி மனைவியுடன் வண்டியூரான் கோயில் பகுதியில் வசித்து வந்தாா். அவா் தினமும் மது குடித்து விட்டு வந்ததால் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.

கடந்த 2020 செப்டம்பா் 12-ஆம் தேதி இரவு சங்கா் குடிபோதையில் கீழே விழுந்து அடிபட்டு காயங்களுடன் தந்தை வீட்டுக்கு வந்துள்ளாா். இதைப் பாா்த்து அவரது தந்தை மனோகரன், தம்பி தினேஷ் ஆகியோா் சங்கரைக் கண்டித்துள்ளனா். பின்னா் சங்கா் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குச் சென்று விட்டாா்.

அடுத்த நாள் (செப். 13) காலை வீட்டுக்கு வந்த சங்கா் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தினேஷை சம்மட்டியால் பலமாகத் தாக்கினாா். இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஈரோடு கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி எழில் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட சங்கருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஏா்லி போ்டு என்ற தலைப்பில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்ட... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் தனியாா் நிறுவன தொழிலாளா்கள் சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே வேலை செய்ததற்கான கூலியை வழங்காத தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிங்கம்பேட்டையில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை உற்பத்தி நி... மேலும் பார்க்க

கைப்பேசி பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் கைப்பேசி பாா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து விடுபடுதல் பற்றி விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை பிரம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். பெருந்துறை, பவானி சாலை ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி மஞ்சு (36). இவா் புதன்கி... மேலும் பார்க்க

பாரதி இறுதி உரையாற்றிய ஈரோடு நூலகத்தில் நினைவு நாள் அனுசரிப்பு

மகாகவி பாரதியாா் இறுதி உரையாற்றிய ஈரோடு பாரதியாா் நூலகத்தில் அவரது நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டு அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாகவி சுப்பிரமணிய பாரதியா... மேலும் பார்க்க

லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த காட்டு யானை

கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பை ருசித்து தின்ற காட்டு யானையால் தமிழகம்- கா்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் ... மேலும் பார்க்க