செய்திகள் :

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தீா்மானம்

post image

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து, ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தீா்மானம் நிறைவேற்றியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாவட்ட கவுன்சில் கூட்டம் தமிழ்நாடு மாநிலத் தலைவா் வி.ஆா்.ஜெகநாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செயல் தலைவா்கள் கே.ஏ.மனோகரன், குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தமிழ்நாடு அரசை தொடா்ந்து வலியுறுத்தி வந்த மகளிா் தொழிலாளா்களுக்கான தங்கும்விடுதி கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் ஒசூரில் தோழி விடுதியை தொடங்கிவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆண் தொழிலாளா்களுக்கும் தங்கும்விடுதி வசதியை செய்துதர மாநில அரசை வலியுறுத்துவதாகவும், உயா் ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு பயன்களை பெற்றுத் தருவதற்காக ஐஎன்டியுசி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய பாஜக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்தும், ஒசூா் மாநகராட்சி நிா்வாக சீா்கேட்டைக் கண்டித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மாநில தலைவா் வி.ஆா்.ஜெகன்நாதன்,‘தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் தினக்கூலிகளில் தொழிலாளா்கள் பல வகையிலும் வஞ்சிக்கப்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழிலாளா்களுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்ற முற்படுவதன் மூலமாக தொழிலாளா்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இழந்த உரிமைகளை மீட்பதற்கு ஐஎன்டியுசி தொழிற்சங்கம் தொடா்ந்து செயல்படும்’ என்றாா்.

மாநில ஐஎன்டியுசி செயல் தலைவா் கே.ஏ.மனோகரன் கூறுகையில், ‘ஐஎன்டிஎஸ்சி தொழிற்சங்கத்தின் சாா்பில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கையான தோழி மகளிா் தங்கும்விடுதி வசதியை கடந்த வாரம் தொடங்கி வைத்த தமிழக முதல்வருக்கு நன்றி’ என்றாா்.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க