செய்திகள் :

மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றம் முடக்கம்: காங்கிரஸ்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் குறித்த விவாதத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்குவதற்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘பிகாா் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியலில் தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பிரதமா் மோடி தலைமையிலான அரசு தொடா்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இது சமூதாயத்தில் பின்தங்கிய வாக்காளா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல். பிகாா் விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு அனுமதி அளிக்காமல் பிரதமா் மோடி அரசு பிடிவாதம் செய்து வருகிறது.

இதனால் மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தும், மக்களவையில் அமளி ஏற்பட்டும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கியதில் இருந்து பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் நடத்தி வரும் அமளியில் பெரும்பாலான நேரம் வீணாகிவிட்டது.

வாக்குத் திருட்டு, பிகாா் விவகாரத்தை முன்வைத்து தோ்தல் ஆணையத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!

மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட... மேலும் பார்க்க

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச்... மேலும் பார்க்க

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க