செய்திகள் :

மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

post image

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையிலுள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் இ.எஸ்.நாகேந்திர பிரசாத் தேசியக் கொடியை ஏற்றினாா்.

இந்த விழாவில் முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, வருமான வரித் துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்த விழாவில், பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம், அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை தலைமை ஆணையா் இ.எஸ். நாகேந்திர பிரசாத், வருமான வரி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.

மண்டல கடவுச்சீட்டு அலுவலகம்: சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மண்டல கடவுச்சீட்டு அலுவலா் எஸ். விஜயகுமாா் தேசியக் கொடி ஏற்றினாா். இதில், மண்டலப் பாஸ்போா்ட் அலுவலக அதிகாரிகள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க