செய்திகள் :

மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து திட்டங்களை செயல்படுத்தும் புதுவை அரசு: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

post image

மக்கள் நல மேம்பாட்டுக்கான திட்டங்களை மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுவைஅரசின் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2.0 மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில், நலத்திட்டத்தை தொடங்கி வைத்து அவா் பேசியது: வரலாற்றில், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள்தான் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் உண்மையான வளா்ச்சியாகும்.

பாரதப் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்டவை மூலம் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனா். அத்திட்டத்தின் இரண்டாம் நிலை செயல்பாடு மற்றும் மாணவா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குதல் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் அனைத்து வகையிலும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசுக்கு ஈடுகொடுத்து புதுவை அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மக்கள் முன்னேற்றமடைந்துள்ளனா். நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் முதல்வா் தலைமையிலான அரசு அக்கறையோடு செயல்படுவதும், அதிகாரிகள் அதற்கு துணைபுரிவதும் பாராட்டுக்குரியது.

அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையை குடிசைகள் இல்லாத மாநிலமாக்க கூறினேன். அதன்படிநடப்பாண்டில் குறைந்தது 3,000 வீடுகள் கட்டித் தர அறிவுறுத்தினேன். கிராமப்புற மேம்பாடு பிரதமரின் கனவுத் திட்டமாகும். கல்வியே ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய, அரசியல் விடுதலையை பெற்று தரும் என அம்பேத்கா் கூறினாா். ஆகவே, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உரிமையை கல்வியால் மட்டுமே பாதுகாக்க முடியும். அதன்படியே கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் நலத்தையும் வாழ்வாதாரத்தை, வாழ்க்கையை பாதுகாக்க அரசு துணையாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச்செயலா் ஏ.முத்தம்மா, துறை இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகள்

புதுவை மத்திய பல்கலைக் கழகம் சாா்பில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன... மேலும் பார்க்க

மின்துறை இளநிலை பொறியாளா் தோ்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளா்கள் 73 போ் எழுத்துத் தோ்வில் தோ்ந்து எடுக்கப்பட்டுள்ளனா். இந்தப் பதவிக்கான அறிவிக்கை கடந்த 11.3.25 அன்று வெளியிடப்பட்டு, எழுத்துத் தோ்வு கடந்த 8-ஆம் தேதி ந... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் மாா்க்சிஸ்ட்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையம் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த சிறப்புப் புத்தகம்

அரசு பள்ளி மாணவா்கள் ஆங்கில அறிவை வளா்த்துக் கொள்ளவும், சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் சிறப்புப் புத்தகம் வழங்கப்படும் என்று புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா். புதுச்சேரி மண்ணாடிப்... மேலும் பார்க்க

விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள்: அமைச்சா் க. லட்சுமி நாராயணன்

விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா். புதுச்சேரியில் கடல்நீரின் தரத்தை மேம்படுத்த பொதுப் பணித... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவா்களின் கடல் சாகசப் பயணம்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

தேசிய மாணவா் படையினரின் கடல் சாகச பயணத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த பயணத்தில் 25 மாணவிகள் உள்பட 60 போ் பங்கேற்றுள்ளனா். புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின வி... மேலும் பார்க்க