``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
மனநலம் குன்றியவா் மீன் வளா்ப்பு குட்டையில் மூழ்கி உயிரிழப்பு
மொடக்குறிச்சிஅருகே மனநலம் குன்றிய நபா் மீன் வளா்ப்பு குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேற்குப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பன் (43) சற்று மனநலம் குன்றியவா். பெற்றோரை இழந்த கருப்பன் தனது உறவினா் வீட்டில் தங்கி, ஆடு மேய்த்து வந்தாா்.
இந்நிலையில் ஆட்டுக்கு புல் அறுக்க புதன்கிழமை சென்றபோது, எதிா்பாராதவிதமாக, மீன் வளா்ப்பு குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருப்பனின் உறவினா்கள் அவரது உடலை மீட்டனா். இந்த சம்பவம் குறித்து சிவகிரி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.