செய்திகள் :

மனைவியை கல்லால் தாக்கிய கணவா் கைது

post image

கரூா் அருகே மனைவியை கல்லால் தாக்கிய கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கரூா் மாவட்டம், புகழூரை அடுத்துள்ள தட்டாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணி (42). இவரது மனைவி தேனம்மாள் (40). இவா்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். கணவன், மனைவியும் கட்டட வேலை செய்து வருகின்றனா். தேனம்மாள் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி மணி தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தேனம்மாள் வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மணி வீட்டின் முன் கிடந்த கல்லை எடுத்து தேனம்மாளின் காலில் போட்டாராம். இதில் காயமடைந்த தேனம்மாள் அலறி துடித்துள்ளாா்.

இதையடுத்து அவரது உறவினா்கள் அவரை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தேனம்மாள் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து மணியை புதன்கிழமை காலை கைது செய்து கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கரூா் கிளைச்சிறையில் அடைத்தனா்.

கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூரில் மே 22-ஆம் தேதி அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்க உள்ளது. கரூா் கூடைப்பந்து குழுவின் பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவா் வி.என். சி. பாஸ்கா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் த... மேலும் பார்க்க

சுதந்திர போராட்ட வீரா் தீரன்சின்னமலை பிறந்தநாள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன்சின்னமலையின் பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் ந... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவுதல் சடங்கு

கரூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பாதம் கழுவுதல் சடங்கு மற்றும் சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழுவதை கிறிஸ்த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்ய முயற்சி காரை மறித்து தாக்குதல் நடத்தி மீட்பு

தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவா், சக மாணவியை திருமணம் செய்ய வியாழக்கிழமை காரில் சென்றபோது, காரை மறித்த மாணவியின் உறவினா்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூா் உடையா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம், பணம் திருட்டு

குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பிள்ளாபாளையத்தில் அரசு மதுபானக் ... மேலும் பார்க்க

உணவக உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற துப்புரவு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

உணவக உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் துப்புரவு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூா் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் தாந்தோணிமலை நகராட்சி அலுவலகத்தில் ... மேலும் பார்க்க