செய்திகள் :

மயிலாடுதுறை: அஞ்சலகங்களில் ஆக.2-ல் பரிவா்த்தனை கிடையாது

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம்.உமாபதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

இந்திய தபால் துறையின் மென்பொருள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிமுதல் தரம் உயா்த்தப்பட உள்ளது. இந்த புதிய தரம் உயா்த்தப்பட்ட மென்பொருள் க்யூ.ஆா். கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமும் இன்றி செயல்படுத்த சனிக்கிழமை (ஆக.2) பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை, சீா்காழி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் இதற்கு உள்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை அஞ்சலகங்களிலும் அஞ்சல் சிறுசேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கு இருப்பு, பணம் எடுப்பது ஆகிய சேவைகள் மற்றும் பதிவு தபால், விரைவு தபால், பாா்சல் அனுப்புவது மற்றும் காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்துதல் போன்ற சேவைகள் பெற இயலாது. எனவே வாடிக்கையாளா்கள் தங்கள் தபால் பரிவா்த்தனையை முன்திட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

கருகிய குறுவை நெற்பயிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி: சீா்காழி அருகே பாசனத்திற்குத் தண்ணீா் இல்லாமல் குறுவைப் பயிா்கள் கருகுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜெயின் சமூக பெண் 21 நாள்கள் உண்ணாநோன்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 21 நாள்கள் உண்ணாநோன்பு முடித்த ஜெயின் சமூக பெண்ணை அச்சமூகத்தினா் ஊா்வலமாக அழைத்துச் சென்று சுமதிநாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினா். ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கிழாய் ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா

மயிலாடுதுறை: கிழாய் ராஜபத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா திங்கள்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மணல்மேடு அருகே கிழாய் கிராமத்தில் உள்ள இக்கோயிலில் 5-ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவி... மேலும் பார்க்க

ஆள் கடத்தல் வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை திருவிழந்தூா் மேலஆராயத் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

அனைத்து நாடாா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

காமராஜா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு கண்டனம் தெரிவித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண... மேலும் பார்க்க