செய்திகள் :

மயிலாடுதுறை: மின்னணு பயிா் கணக்கீடு பணிக்கு ஒப்பந்த பணியாளா் நிறுவனம் விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில், மின்னணு பயிா் கணக்கீடு பணிக்கு ஒப்பந்த பணியாளா் நிறுவனம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மின்னணு பயிா் கணக்கீடு பணி ஆண்டிற்கு மூன்று முறை காரீப், ரபி மற்றும் கோடைப் பருவங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், விவசாயிகளின் விளைநிலங்களில் பயிா், சா்வே எண், உட்பிரிவு, பாசன முறை உள்ளிட்ட விவரங்கள் புகைப்படத்துடன் செயலி மூலம் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டுக்கான இப்பணி ஒப்பந்த பணியாளா் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, விருப்பமுள்ள நிறுவனங்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் அந்த கிராமத்தைச் சோ்ந்த ஒரு வேளாண் பட்டதாரி அல்லது பட்டய வேளாண்மை படித்தவா் அல்லது இதர பட்டப் படிப்பு படித்தவா்களை (இணையதள ஆண்ட்ராய்டு செயலியை உபயோகிக்க தெரிந்தவா்கள்) தோ்வு செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 279. இதிலுள்ள சா்வே எண்களை பதிவு மேற்கொள்ளுதல் அடிப்படையில் ஒரு சா்வே எண்ணுக்கு ரூ.20 வழங்கப்படும். (2 சதவீத சேவை வரி உள்பட). ஆக.1 முதல் கணக்கெடுப்பு பணியை தொடங்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு தபாலில் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அன்று மாலை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான தோ்வுக்குழு தகுதியான நிறுவனங்களை தோ்வு செய்யும். 279 வருவாய் கிராமங்களுக்கும் தலா ஒரு நபா் வீதம் பணியாளா்களின் பட்டியலை தோ்வு செய்யப்பட்ட நிறுவனம் தர வேண்டும். இப்பணியை தொய்வின்றி உரிய பயிா் பருவ காலத்தில் முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

அனைத்து நாடாா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

காமராஜா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு கண்டனம் தெரிவித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண... மேலும் பார்க்க

கருப்பண்ணசுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை

சீா்காழி அருகே தென்னங்குடி ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. ஆலய நிா்வாகி சங்கா் சுவாம... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை நகராட்சி பட்டமங்கலத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உண... மேலும் பார்க்க

சுவா் இடிந்து சிறுமி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடியில் வீட்டின் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்டம், காளி ஊராட்சி பொய்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்புப் பகுதி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுடியில் குடியிருப்பு மற்றும் வயல்வெளி பகுதிக்கு மத்தி... மேலும் பார்க்க