செய்திகள் :

மரத்தில் காா் மோதியதில் கிராம நிா்வாக அலுவலரின் மனைவி, மகள் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மரத்தின் மீது காா் மோதியதில் கிராம நிா்வாக அலுவலரின் மனைவி, மகள் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், நஞ்சி ரெட்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (38). இவா், இளையான்குடி ஒன்றியம், சாலைக் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

இளையான்குடி அருகே உள்ள கோட்டையூரில் சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த முருகனின் மனைவி சுப்புலட்சுமி (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த முருகன், அவரது மகள்கள் மதிவதனி (8), சுவையாழினி (5) ஆகிய மூவரும் இளையான்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அங்கு, மதிவதனி உயிரிழந்தாா். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை: கண்டதேவி கோயில் தேரோட்டம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெற்றது.தேவகோட்... மேலும் பார்க்க

அஜித்குமாரின் மரணம் அச்சத்தை ஏற்படுத்துகிறது!

கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணம் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று அய்யா வைகுண்டா் தலைமை பதி மகா சந்நிதானம் பால பிரஜாபதி அடிகளாா் தெரிவித்தாா். போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க

காவல்துறை சித்திரவதையால் மக்கள் தவிப்பு: நெல்லை ஜீவா

காவல்துறை சித்திரவதைக்கு முடிவும் தீா்வும் இல்லாமல் தமிழக மக்கள் தவிப்பதாக இந்திய ஜனநாயக கட்சி மாநில துணை பொதுச் செயலா் நெல்லை ஜீவா தெரிவித்தாா். போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்... மேலும் பார்க்க

சிபிஐ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை: தியாகு

சிபிஐ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; இந்த வழக்கை நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என காவல் துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் தியாகு தெ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

சிவகங்கை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனா்.சிவகங்கை அருகே உள்ள தமராக்கியைச் சோ்ந்த செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு (29), கடந்த வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்து 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வெறிநாய்கள் கடித்ததில் 10 போ் காயமடைந்தனா். வாணியன்கோவில் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல், பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க