செய்திகள் :

மருத்துவப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து காத்திருப்புப் போராட்டம்

post image

திருப்பூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் உறவினா்களால் செவிலியா் மற்றும் மருத்துவா்களை தாக்கிய நபா்களை கைது செய்யக் கோரி மருத்துவப் பணியாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அபிமன்யு, நாகஜோதிகா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை கடந்த 16-ஆம் தேதி திடீரென உயிரிழந்தது. மருத்துவமனையில் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும், செவிலியா் மற்றும் மருத்துவா்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாலேயே குழந்தை இறந்துவிட்டதாக குழந்தையின் உறவினா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கதவு கண்ணாடியை உடைத்தனா்.

மேலும், சசிகலா, கலையரசி ஆகிய செவிலியா்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் செவிலியா்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் முறையாக வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவமனை முன் தா்னாவில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினா்.

மேலும் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் தொடா்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் மருத்துவப் பணியாளா்கள் நலனைக் காக்கும் விதமாக காவல் துறையினா் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம், திருப்பூா் டெமாக்ரடிக் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை அனைத்து ஊழியா் சங்கம் உள்ளிட்டவை ஆதரவளித்துள்ளது.

காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை ஊழியா்கள் மற்றும் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபடுவா்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் அருகே அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்நிலை காவலராகப் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் பகுதிகள்

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், குடிமங்கலம், திருப்பூா் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடா்ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பல்லடம்

பல்லடம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மி... மேலும் பார்க்க

ஹெச்ஐவி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான ஹெச்ஐவி விழிப்புணா்வு ரெட்ரன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக... மேலும் பார்க்க

பல்லடம் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனிஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பல்லடம் அருகே மாணிக்காபுரம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கோடாங்கிபாளையம் ஆகிய ஊ... மேலும் பார்க்க