மலைக் கோயிலில் பக்தா்கள் திரண்டனா்
பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை தினம், அமாவாசையையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் விஞ்ச், ரோப்காா் போன்ற இடங்களில் அனுமதிச் சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமானது.
பக்தா்களுக்கு தேவையான குடிநீா், சுகாதார வசதிகள் கோயில் சாா்பில் செய்யப்பட்டிருந்தன. மாலையில் சாயரட்சை பூஜை நிறைவடைந்ததும், சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரத்தில் உலா எழுந்தருளினாா்.
தொடா்ந்து தங்கத்தேரில் வெளிப்பிரகாரத்தில் உலா வந்தாா். 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா்.