செய்திகள் :

மலையாளத்தில் நல்ல திரைப்படங்கள் உருவாக இதுதான் காரணம்: கலித் ரஹ்மான்

post image

மலையாள சினிமா குறித்து இயக்குநர் கலித் ரஹ்மான் பேசியுள்ளார்.

அனுராக கரிக்கின் வெள்ளம் (Anuraga Karikkin Vellam) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கலித் ரஹ்மான். தொடர்ந்து, உண்டா (unda), லவ் (love), தள்ளுமலா (thallumala) என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து மலையாளத் திரைத்துறையின் முக்கியமான இளம் இயக்குநராக உள்ளார்.

தற்போது, இவர் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ஆழப்புழா ஜிம்கானா. நஸ்லன் நாயகனாக நடித்த இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கலித் ரஹ்மானிடம், “இந்தியளவில் மலையாளத்தில்தான் சிறந்த படங்கள் உருவாகின்றன என்பது போன்ற கருத்துகளைப் பார்க்கிறோம். மலையாள சினிமாவிற்குள் இருக்கும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு, கலித் ரஹ்மான், “மலையாளத் திரைத்துறையில் வித்தியாசமான படங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. மலையாள சினிமாவில் திறமையானவர்களும் அதிகம் என்பதால் சிறப்பாக மேலும் சிறப்பாக என முன்னேற வேண்டியுள்ளது. மலையாள ரசிகர்கள் இலக்கியம் படிப்பதுடன் அதிகமாக உலக சினிமாக்களை பார்க்கின்றனர். என் அம்மா பள்ளி, கல்லூரிக்குச் செல்லாதவர். ஆனால், இயக்குநர் கிம் கி டுக் படங்கள், ஈரான் படங்கள் என ரசனையாகத் திரைப்படங்களைப் பார்க்கிறார். இலக்கியங்கள் பற்றியும் அவரிடம் பேச முடியும். இதனால்தான், மலையாளத் திரைப்படங்கள் அழுத்தமாக உருவாகின்றன என நினைக்கிறேன்.” என்றார்.

இதையும் படிக்க: பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு!

மோகன்லாலின் துடரும் வெளியீட்டுத் தேதி!

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான்திரைப்படம் ரூ. 250 க... மேலும் பார்க்க

பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்: வசந்த பாலன்

பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்காக மன்னிப்புக் கேட்பதாக இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா. இரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகளையும் திரைப்ப... மேலும் பார்க்க

ஆட்டோகிராஃப் - மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சேரன் சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்தப் படத்தில் சினேகா, கோபி... மேலும் பார்க்க

இலுப்பக்கோரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு!

இலுப்பக்கோரை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயம் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ... மேலும் பார்க்க

எறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

எறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் விமர்சையாக நடைபெற்றது. திருவெறும்பூர் என பெயர் வர காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோயில்... மேலும் பார்க்க

ஜூலையில் வாடிவாசல் படப்பிடிப்பு!

வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டத... மேலும் பார்க்க