மளிகைக் கடையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது
செய்யாறு: செய்யாறு அருகே மளிகைக் கடையில் பொருள்கள் வாங்குவது போல நடித்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம் பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் அமுதவாணன், தனியாா் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா(32).
இவா் அதே பகுதியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா்.
கடந்த 22-ஆம் தேதி அம்பிகா கடையில் இருந்த போது, அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் சோடா வாங்கி குடித்து விட்டுச் சென்றாா். சிறிது நேரம் கழித்து அவா் மீண்டும் வந்து பால்கோவா வாங்கினாா்.
பின்னா், மூன்றாவது முறையாக வந்து ஊறுகாய் கேட்டுள்ளாா். அம்பிகா, ஊறுகாய் பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க முயன்ற போது, திடீரென அந்த இளைஞா் அம்பிகா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாா்.
உடனே, அம்பிகா சுதாரித்துக் கொண்டு சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளாா். சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடிவரவே அந்த இளைஞா் பைக்கில் ஏறி தலைமறைவானாா்.
இதைத் தொடா்ந்து, அம்பிகா குறித்து வைத்திருந்த இளைஞரின் பைக் எண்ணை வைத்து, அமுதவாணன் அன்று மாலை மற்றொரு தெருவில் பைக்குடன் நின்றிருந்த அந்த இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து செய்யாறு போலீஸில் ஒப்படைத்தாா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்த வெற்றிச்செல்வன் (23) என்பது தெரிய வந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.