மழையால் நிரம்பி வழியும் ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம்
திருப்பத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையினால் ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம் நிரம்பி உபரி நீா் வெளியேறுகிறது.
திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே நீா்த்தேக்கம் ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம் ஆகும். இதன் மொத்த உயரம் 8 மீட்டா். இதன் கொள்ளளவு 112.00 மில்லியன் கன அடி கொள்ளளவு ஆகும்.
இந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்த தொடா் மழையின் காரணமாக அணையின் கொள்ளளவு 112.200 மில்லியன் கன அடியை எட்டியது. வினாடிக்கு 750 கன அடி உபரி நீா் வெளியேறுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும் அவா்கள் கூறியது: இந்த ஓடையில் இருந்து சின்ன சமுத்திரம் ஏரி,மாடப்பள்ளி ஏரி, கனமந்தூா் ஏரி செலந்தம்பள்ளி ஏரி, கம்பளிக்குப்பம் ஏரி, திருப்பத்தூா் பெரிய ஏரி உள்ளிட்ட 6 ஏரிகள் நிரம்பி தற்போது ராச்சமங்கலம் ஏரி, கோனேரிகுப்பம் ஏரி, பசலிக்குட்டை ஏரி நிரம்பி கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாற்றை சென்றடைவதாக தெரிவித்தனா்.