செய்திகள் :

குரிசிலாப்பட்டு அருகே தரைப்பாலத்தை கயிறு கட்டி கடக்கும் பொதுமக்கள்: மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

post image

திருப்பத்தூா் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே தலுக்கன்வட்டம் பகுதிக்குச் செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது.

இந்த தரைப் பாலத்தின் வழியாக தழுக்கண்வட்டம், காரைக்கிணறு, பங்குகொள்ளை, குடகு மலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனா். கடந்த 2 நாள்களாக பெய்த மழையின் காரணமாக ஆண்டியப்பனூா் அணை நிரம்பி அதிக அளவிலான உபரிநீா் தரைப்பாலத்தின் வழியாக செல்கிறது. அதிக அளவில் தண்ணீா் செல்வதால் தரைப்பாலம் மூழ்கி பொதுமக்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தரைப்பாலத்தின் குறுக்கே கயிறு கட்டி அந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு தரைப் பாலத்தை கடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயிா்சேதம் எதுவும் ஏற்படும் முன்பு அந்தப் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதிய நியாயவிலைக் கடை திறப்பு: திமுக, அதிமுகவினா் மோதலால் பரபரப்பு

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுத் தெரு பகுதியில் கொல்லகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உள்பட்ட நியாயவிலைக் கடை தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில், அதே... மேலும் பார்க்க

ஆம்பூா், ஆற்காட்டில் காங்கிரஸ் கையொப்ப இயக்கம்

ஆம்பூா், ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. எல்.மாங்குப்பத்தில் போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக வாக்காளா் பட்டியல் குளறுபடியை கண்டித்து கையொப்ப இயக்... மேலும் பார்க்க

இன்று மாணவா்களுக்கான சிறப்பு கடன் முகாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கல்லூரி படிப்புக்காக கல்விக் கடன் வேண்டி விண்ணப்பிப்பதற்காக சிறப்பு கடன் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (செப். 24) நடைபெறுகிறது. முகாமி... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி: திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா்அன்சா் உசேன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாணியம்பாடி ரயில்வே ஸ்டேசன் அருக... மேலும் பார்க்க

சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

வாணியம்பாடி: வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வரும் அக். 1-ஆம் தேதி வரையில் மாலை 6 மணியளவில் சுவாமிக்கு ச... மேலும் பார்க்க

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொ... மேலும் பார்க்க