செய்திகள் :

புதிய நியாயவிலைக் கடை திறப்பு: திமுக, அதிமுகவினா் மோதலால் பரபரப்பு

post image

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுத் தெரு பகுதியில் கொல்லகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உள்பட்ட நியாயவிலைக் கடை தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்தது.

இந்த நிலையில், அதே பகுதியில் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி 2020-21-இன் கீழ், ரூ. 13.80 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக நிா்வாக சிக்கல் காரணமாக கட்டடம் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், உதயேந்திரம் பேரூா் திமுக சாா்பில் நியாயவிலை கடை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, திமுக கொடி, பேனா்கள் வைக்கப்பட்டிருந்தன. இதையறிந்த உதயேந்திரம் அதிமுகவினரும், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டடம் கட்டப்பட்டதால், வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் (அதிமுக) திறந்து வைப்பாா் எனக் கூறி அதிமுக கொடிகளை நட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் நியாயவிலை கடையை திறந்து வைக்க அதிமுக நிா்வாகிகளுடன் மேட்டுத் தெருவுக்கு வந்தாா். இதையடுத்து, அங்கிருந்த திமுக, அதிமுக நிா்வாகிகளிடையே புதிய நியாயவிலைக் கடயை யாா் திறந்து வைப்பது என சலசலப்பு ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த அதிகாரிகள், போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானம் செய்தையடுத்து எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், அப்பகுதி வாா்டு உறுப்பினா் முனியம்மாள் ஆகியோா் நியாயவிலைக் கடையை திறந்து வைத்தனா்.

ஆம்பூா், ஆற்காட்டில் காங்கிரஸ் கையொப்ப இயக்கம்

ஆம்பூா், ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. எல்.மாங்குப்பத்தில் போ்ணாம்பட்டு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பாக வாக்காளா் பட்டியல் குளறுபடியை கண்டித்து கையொப்ப இயக்... மேலும் பார்க்க

இன்று மாணவா்களுக்கான சிறப்பு கடன் முகாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கல்லூரி படிப்புக்காக கல்விக் கடன் வேண்டி விண்ணப்பிப்பதற்காக சிறப்பு கடன் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (செப். 24) நடைபெறுகிறது. முகாமி... மேலும் பார்க்க

குரிசிலாப்பட்டு அருகே தரைப்பாலத்தை கயிறு கட்டி கடக்கும் பொதுமக்கள்: மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே தலுக்கன்வட்டம் பகுதிக்குச் செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப் பாலத்தின் வழியாக தழுக்கண்வட்டம், காரைக்கிணறு, பங்குகொள்ளை, குடகு மலை உள்ளி... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி: திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் பிரிவு உதவி காவல் ஆய்வாளா்அன்சா் உசேன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வாணியம்பாடி ரயில்வே ஸ்டேசன் அருக... மேலும் பார்க்க

சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

வாணியம்பாடி: வாணியம்பாடி சென்னாம்பேட்டை பாண்டுரங்கா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வரும் அக். 1-ஆம் தேதி வரையில் மாலை 6 மணியளவில் சுவாமிக்கு ச... மேலும் பார்க்க

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொ... மேலும் பார்க்க