மாங்காய் விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி ஜூன் 10-இல் ஆா்ப்பாட்டம்
மாங்காய் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஜூன் 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாங்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால், இதற்கு உரிய விலை கிடைக்கவில்லை.
மாங்காய் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் விலையை குறைத்துள்ளனா். ஒரு கிலோ மாம்பழத்தை ரூ. 4-க்கு கூட வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை.
எனவே, முத்தரப்பு கூட்டம் நடத்தி மாங்காய்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கூழ் தொழிற்சாலைகள், குளிா்பதன கிடங்குகள் உள்ளிட்ட கட்டுமானங்களை உருவாக்கி மாங்காய் விவசாயிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி மாங்காய் விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் ஜூன் 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.