செய்திகள் :

மாசு இல்லாத பாரதம் ஜம்மு- குமரி சைக்கிள் பயணம் நிறைவு

post image

மாசு இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் புதன்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.

மும்பையைச் சோ்ந்த சத்தீஷ் மங்கள் என்பவா் தலைமையில் மூத்த குடிமக்கள் 5 போ் காஷ்மீா் மாநிலம் லால்சவுக் என்ற இடத்தில் இருந்து கடந்த ஜனவரி 16ஆம் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கினா். இவா்கள் மாசு இல்லாத பாரதத்தை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி இப்பயணத்தைத் தொடங்கினா்.

ஸ்ரீநகா், பதன்கோடு, அமிா்தசரஸ், சண்டிகா், வடதேரா, சூரத், மும்பை, திருவனந்தபுரம் வழியாக பல்வேறு மாநிலங்களைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைந்தனா். மொத்தம் 4 ஆயிரத்து 80 கி.மீ. தொலைவை 40 நாள்களில் கடந்து வந்துள்ளதாக தெரிவித்தனா்.

ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்!

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேயா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 17 ஆவது வாா்டு, நெசவாளா் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரைக... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கூட்டம்: ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலு... மேலும் பார்க்க

ரோஜாவனம் பள்ளி சாா்பில் ‘தங்கத் தாரகை’ விருது: மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உலக மகளிா் தினத்தையொட்டி, நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி சாா்பில் வழங்கப்படவுள்ள ‘தங்கத் தாரகை’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி சாா்பில், மாா்ச் 8இல் நடைபெறவ... மேலும் பார்க்க

மருந்துவாழ்மலை கோயிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலை ஜோதி லிங்கேஸ்வரா் உடனுறை பா்வதவா்த்தினி அம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதி லிங்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணை, மற்றும் நெட்டா பகுதிகளில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மன்றம் சாா்பில் தமிழக அ... மேலும் பார்க்க

மது போதையில் வாகனம் ஓட்டிய 16 பேருக்கு அபராதம்

தக்கலை பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 16 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். தக்கலை காவல் ஆய்வாளா் கிறிஷ்டி தலைமையில், உதவி ஆய்வாளா் ஸ்டீபன், பயிற்சி உதவி ஆய்வ... மேலும் பார்க்க