மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு
நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜிவி ஞானமுத்து றிஎன்டிறிஏ நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேகரகுரு டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமை ஆசிரியை லோவிசாள் ஞானதீபம் வரவேற்றாா். சென்னை தொழிலதிபா் சாமுவேல் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
இதில் முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினா் திலகா், சாமுவேல் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.