மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் தலைமறைவு
பரமத்தி வேலூா் அருகே மாணவியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவியை ஆசை வாா்த்தைக்கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞா் பிரதீப் மீது மாணவியின் பெற்றோா் வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த வேலூா் போலீஸாா் தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனா்.