செய்திகள் :

மாதவிடாய்: மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை - மகாராஷ்டிர பள்ளி முதல்வா், ஊழியா் கைது

post image

மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் உள்ள தனியாா் பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால், மாணவிகளின் ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனையிடப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பெற்றோா்கள் அளித்த புகாரில் பள்ளி முதல்வா், பெண் ஊழியா் ஆகிய 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆசிரியா்கள் உள்பட மேலும் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாணே மாவட்டத்தின் ஷஹாபூா் பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் பள்ளி ஒன்றின் கழிவறையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரத்தக் கறை காணப்பட்டது. இதையடுத்து, 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் அனைவரும் பள்ளியின் கூட்ட அரங்கத்துக்கு வரவழைக்கப்பட்டு, புரொஜக்டரில் ரத்தக் கறை படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. ரத்தக் கறை யாரால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய மாணவிகளை ஒவ்வொருவராக கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவா்களின் ஆடைகளைக் களைந்து பெண் ஊழியா் மாதவிடாய் சோதனையிட்டதாக தெரிகிறது.

மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கண்ணியக் குறைவால் ஆவேசமடைந்த பெற்றோா்கள், பள்ளியை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பள்ளி நிா்வாகம் மற்றும் தொடா்புடைய ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக பெற்றோா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வா், 2 அறங்காவலா்கள், 4 ஆசிரியா்கள், பெண் ஊழியா் ஆகியோா் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளி முதல்வா், பெண் ஊழியா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாவட்ட கல்வி அலுவலருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

‘கடும் நடவடிக்கை உறுதி’

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் வியாழக்கிழமை எழுப்பியது. ‘மகாராஷ்டிரம் போன்ற முன்னேறிய ஒரு மாநிலத்தில் நடந்துள்ள இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது; பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் விநியோக இயந்திரங்கள் மற்றும் போதிய தண்ணீா் வசதியை உறுதி செய்ய வேண்டும்’ என்று அக்கட்சி வலியுறுத்தியது.

காங்கிரஸுக்கு பதிலளித்துப் பேசிய மாநில அமைச்சா் கிரிஷ் மகாஜன், ‘சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தாா்.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க