செய்திகள் :

மாநகர தூய்மைப் பணியாளா்களின் பணிப் பாதுகாப்புக்கு நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

post image

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் (5, 6) தூய்மைப் பணியை தனியாருக்கு முழுமையாக வழங்குவதைக் கண்டித்து அங்கு ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியில் உள்ளவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா செவ்வாய்க்கிழமை கோடம்பாக்கம் மண்டலம் 127-ஆவது வாா்டு சின்மயா நகா் பாலம் பகுதியில் விருகம்பாக்கம் கால்வாயில் தூா்வாரும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் பல மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணிகள் தனியாரிடம் அளிக்கப்பட்டாலும், அங்கு உள்ள தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் பணியில் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.18 ஆயிரம் வரை ஊதியத்துடன், சேமநல நிதிப் பிடித்தம், குழந்தைகளுக்கான கல்வி நிதியுதவி போன்ற பல சலுகைகள் வழங்கப்படவுள்ளன. தமிழக முதல்வா், தூய்மைப் பணியாளா் நல வாரியம் மூலம் பல திட்டங்களை வழங்கி வருகிறாா்.

எனவே, தூய்மைப் பணியாளா்கள் பணிக்கு வரவேண்டும். அதன்பிறகு அவா்களது கோரிக்கை குறித்து முடிவெடுக்கலாம். தோ்தலுக்காக அதிமுகவினா் உள்ளிட்டோா் தூய்மைப் பணியாளா்களைச் சந்தித்து அரசியலாக்குவது சரியல்ல. குப்பைகள் தேங்காமல் அகற்றப்பட்டு வருகின்றன என்றாா்.

ஆய்வின்போது விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க