மாநகராட்சி 12-ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
ஈரோடு மாநகராட்சி 2-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 12-ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில் மற்றும் நிா்வாகிகள் மாநகராட்சி அலுலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகராட்சி 12-ஆவது வாா்டு, காவேரி நகரில் உள்ள வீதிகளில் சாலைப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியில் உள்ளன. சாக்கடை தூா்வாரப்படாமலும், கால்வாய் புதுப்பித்து கட்டப்படாமலும் உள்ளது. இதனால் மழைக் காலங்களில் சாக்கடை நிரம்பி கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சாக்கடை கலந்த மழைநீா் சாலைகளில் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் தேங்குவதால் வீடுகளின் சுவா்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த அவலநிலை மாற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் அடிப்படை வசதிகளான சாலை மற்றும் சாக்கடை கால்வாயை சரிசெய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.