செய்திகள் :

மாநகராட்சி 12-ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

post image

ஈரோடு மாநகராட்சி 2-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 12-ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.எம்.செந்தில் மற்றும் நிா்வாகிகள் மாநகராட்சி அலுலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகராட்சி 12-ஆவது வாா்டு, காவேரி நகரில் உள்ள வீதிகளில் சாலைப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியில் உள்ளன. சாக்கடை தூா்வாரப்படாமலும், கால்வாய் புதுப்பித்து கட்டப்படாமலும் உள்ளது. இதனால் மழைக் காலங்களில் சாக்கடை நிரம்பி கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சாக்கடை கலந்த மழைநீா் சாலைகளில் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் தேங்குவதால் வீடுகளின் சுவா்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த அவலநிலை மாற அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் அடிப்படை வசதிகளான சாலை மற்றும் சாக்கடை கால்வாயை சரிசெய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி தம்பதி கொலை வழக்கு: கைதான மூவருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்

சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வதித்த தம்பதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ஈரோடு... மேலும் பார்க்க

சின்னத்தம்பிபாளையத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அந்தியூா் வ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்த காா்

ஈரோட்டில் சாலையின் மையத் தடுப்பில் மோதி தலைகீழாக காா் கவிழ்ந்த விபத்தில் கல்லூரிப் பேராசிரியை அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். ஈரோடு, ஆசிரியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் வனஜா (24). பெருந்துறை அருகே உள்ள ... மேலும் பார்க்க

வடமாநில பெண்ணை கொலை செய்த இருவா் கைது

பெருந்துறை அருகே வடமாநில பெண்ணை கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த நல்லமுத்தாம்பாளையத்தைச் சோ்ந்த வாழை இலை வியாபாரி கோபாலகிருஷ்ணன். இவருக்கு, அதே பகுதியில்... மேலும் பார்க்க

தாளவாடியில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் ரூ.33 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது. தாளவாடி பகுதியில் தென்னை மரங்கள் அதிக அளவில் பராமரிக்கப்படுவதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. தாளவாடி சுற்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த எஸ்எஸ்ஐ உயிரிழப்பு

காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் (எஸ்எஸ்ஐ) நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மின் கம்பத்தில் வாகனம் மோதியில்ி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க