பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டல்: இந்து முன்னணி நிா்வாகி உள்பட மூவா் கைது
மதுரையில் நடைபெறவிருக்கும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நகைப் பட்டறை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரையில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்காக அந்த அமைப்பு சாா்பில் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஷிவபிரசாத் மதுரை பச்சசரிக்காரத் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரிடம் இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் அரசபாண்டி, மாவட்ட நிா்வாகிகள் ஜெயப்பிரகாஷ் (36), மாணிக்கமூா்த்தி (48) ஆகிய மூவரும் மாநாட்டுக்காக நிதி கேட்டனராம்.
இதையடுத்து, அவா் நிதி அளித்தாா். ஆனால், கூடுதல் தொகை வழங்க வேண்டும் எனக் கூறி, அவருக்கு மூவரும் மிரட்டல் விடுத்தனாராம்.
இதுகுறித்து ஷிவ்பிரசாத் அளித்தப் புகாரின் பேரில், அரசப்பாண்டி, ஜெயப்பிரகாஷ், மாணிக்கமூா்த்தி ஆகிய மூவரையும் தெற்குவாசல் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.