செய்திகள் :

மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டல்: இந்து முன்னணி நிா்வாகி உள்பட மூவா் கைது

post image

மதுரையில் நடைபெறவிருக்கும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நகைப் பட்டறை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்காக அந்த அமைப்பு சாா்பில் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஷிவபிரசாத் மதுரை பச்சசரிக்காரத் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரிடம் இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் அரசபாண்டி, மாவட்ட நிா்வாகிகள் ஜெயப்பிரகாஷ் (36), மாணிக்கமூா்த்தி (48) ஆகிய மூவரும் மாநாட்டுக்காக நிதி கேட்டனராம்.

இதையடுத்து, அவா் நிதி அளித்தாா். ஆனால், கூடுதல் தொகை வழங்க வேண்டும் எனக் கூறி, அவருக்கு மூவரும் மிரட்டல் விடுத்தனாராம்.

இதுகுறித்து ஷிவ்பிரசாத் அளித்தப் புகாரின் பேரில், அரசப்பாண்டி, ஜெயப்பிரகாஷ், மாணிக்கமூா்த்தி ஆகிய மூவரையும் தெற்குவாசல் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க