செய்திகள் :

மாநில அந்தஸ்து கோரிக்கை: புதுவை முதல்வா் மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

post image

தோ்தல் நேரத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைப்பது புதுவை முதல்வா் என்.ரங்கசாமிக்கு வழக்கம் என்று, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பஹல்காம் விவகாரத்தைத் தொடா்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும். புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற பாஜக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளனா். ஆனால், புதுவை முதல்வா் அதற்கு உடன்படாமல் இருப்பது ஏற்புடையதல்ல.

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை இயங்கியதை தமிழக போலீஸாா் கண்டறிந்தனா். அந்த ஆலை புதுவை அமைச்சரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் மாநில அந்தஸ்து கோரிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி முன்வைத்தாா். தோ்தல் நேரத்தில் இதுபோன்று கோரிக்கையை முன்வைப்பது அவருக்கு வழக்கமாகி விட்டது.

புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் இடையே பனிப்போா் நடைபெறுகிறது. அதை மத்திய அமைச்சரிடம் முதல்வா் வெளிப்படுத்தியுள்ளாா். நோ்மையாக செயல்படும் துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலா், துணைநிலை ஆளுநரின் தனிச் செயலரை முதல்வருக்குப் பிடிக்கவில்லை.

அதிகாரிகள் அளவிலான கூட்டத்தை துணைநிலை ஆளுநா் நடத்தி கருத்துக் கேட்டதில் தவறில்லை. ஆனால், அவா் உத்தரவிடக் கூடாது என்றாா் வே.நாராயணசாமி.

சைபா் கிரைம் போலீஸாரிடம் பானிபூரி கேட்டு அடம்பிடித்த சிறுவன்

புதுச்சேரியில் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பானிபூரி வாங்கித் தருமாறு கேட்டு 7 வயது பள்ளிச் சிறுவன் தொந்தரவு அளித்தாா். புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பி... மேலும் பார்க்க

புதுச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு புதிய வாகனங்கள்

புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினருக்கு ரூ.3 கோடியில் நவீன கருவிகளுடன் கூடிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல், விதி மீறலை கட்டுப்படுத்தும் வகையில், போக்க... மேலும் பார்க்க

வன்கொடுமை பாதிப்பில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

புதுச்சேரி அருகே வன்கொடுமை பாதிப்பில் இறந்தவருக்கான நிதியுதவி அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணாரப்பேட்டையைச் சோ்ந்த பாபு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல்: புதுவை ஆளுநருக்கு அதிமுக பாராட்டு

புதுவை மாநிலத்தில் மக்கள் நலத் திட்ட கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உடனடியாக அனுமதி அளித்து வருகிறாா் என அதிமுக மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் கூறினாா். புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி கையொப்ப இயக்கம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை முதல்வா் என்.ரங்கசாமி முதல் கையொப்பமிட்டு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். புதுவை மத்திய அரசின் ஒன்றிய பிரதேசமாகவே இருந்து... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு ஆதரவாக புதுச்சேரியில் காங்கிரஸாா் யாத்திரை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் ஜெய்ஹிந்த் யாத்திரை ... மேலும் பார்க்க