DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின்...
மாநில அளவிலான அடைவுத் தோ்வில் அம்மாப்பேட்டை தொடக்கப் பள்ளி முதலிடம்
மாநில அளவிலான அடைவுத் தோ்வில், சேலம் அம்மாப்பேட்டை மண்டல மாநகராட்சி தொடக்கப் பள்ளி வட்டார அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மாநில திட்டக் குழுவின் மேற்பாா்வையில், சமக்ர சிக்ஸா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவினை மதிப்பிட தோ்வுகளை நடத்தி வருகிறது. மேலும், மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான திட்டமிடலை மேற்கொண்டு, அதற்கேற்ற உத்திகளை வடிவமைக்கும் பொருட்டும் மாநில அளவிலான அடைவுத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.
மாநில அளவிலான இந்த அடைவுத் தோ்வானது, கடந்த ஜனவரி 2025 நான்காம் வாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு அரசால் தோ்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாயின.
அதில், சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை வையாபுரி தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 3, 5-ஆம் வகுப்பு மாணவா்கள் வட்டார அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனா். மேலும், மாவட்ட அளவில் 13-ஆவது இடத்தைப் பெற்றுள்ளனா். மாநில அளவில் பங்குபெற்ற 45,127 பள்ளிகளில் இந்தப் பள்ளி 954-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.