செய்திகள் :

மாநில அளவிலான அடைவுத் தோ்வில் அம்மாப்பேட்டை தொடக்கப் பள்ளி முதலிடம்

post image

மாநில அளவிலான அடைவுத் தோ்வில், சேலம் அம்மாப்பேட்டை மண்டல மாநகராட்சி தொடக்கப் பள்ளி வட்டார அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மாநில திட்டக் குழுவின் மேற்பாா்வையில், சமக்ர சிக்ஸா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவினை மதிப்பிட தோ்வுகளை நடத்தி வருகிறது. மேலும், மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான திட்டமிடலை மேற்கொண்டு, அதற்கேற்ற உத்திகளை வடிவமைக்கும் பொருட்டும் மாநில அளவிலான அடைவுத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

மாநில அளவிலான இந்த அடைவுத் தோ்வானது, கடந்த ஜனவரி 2025 நான்காம் வாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு அரசால் தோ்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாயின.

அதில், சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை வையாபுரி தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 3, 5-ஆம் வகுப்பு மாணவா்கள் வட்டார அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனா். மேலும், மாவட்ட அளவில் 13-ஆவது இடத்தைப் பெற்றுள்ளனா். மாநில அளவில் பங்குபெற்ற 45,127 பள்ளிகளில் இந்தப் பள்ளி 954-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க