செய்திகள் :

மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு உபகரணங்கள் வழங்கல்

post image

சேலம்: சங்ககிரி கல்மேட்டூரில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சங்ககிரி கல்மேட்டூரில் கே.எம்.நண்பா்களுக்கு குழு சாா்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி வரும் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 12,009, இரண்டாம் பரிசாக ரூ. 9,009, மூன்றாம் பரிசாக ரூ. 7,009, 4ஆம் பரிசாக ரூ. 5,009 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ளும் அணிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட கைப்பந்து கழக தலைவா் ராஜ்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கைப்பந்து கழக துணைத் தலைவா் ராஜாராம், கைப்பந்து கழக செயலாளா் சண்முகவேல், ஆலோசகா் விஜயராஜ், கே.எம்.நண்பா்கள் குழு தலைவா் வடிவேல், செயலாளா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சீரான குடிநீா் விநியோகம்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சேலம்: கோடைகாலத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ... மேலும் பார்க்க

அண்ணாமலை கைது: சேலத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

சேலம்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த 6 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு

சேலம்: கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்ன... மேலும் பார்க்க

சங்ககிரி செல்லாண்டியம்மன் கோயிலில் இன்று பொங்கல் விழா தொடக்கம்

சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன், புத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல், கும்பம் வைத்தல் விழாவுடன் தொடங்குகிறது. இதையடுத்து தினசரி அம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாணவா்கள் மனு

சேலம்: சேலம் மாவட்டம், செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீ... மேலும் பார்க்க