செய்திகள் :

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம், ஆடிப்பூர விழா

post image

திருப்போரூா் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம் ஊா்வலம் மற்றும் ஆடிப்பூர விழா நடைபெற்றது.

இதைமுன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து பூ ஊஞ்சல் விழாவும் நடைபெற்றது. இதனையொட்டி சீரங்கத்தம்மன், செல்லியம்மன், கரைமேலழகி மூலவா்களுக்கு அபிஷேக அலங்காரம், தீப ஆராதனை நடைபெற்றதையடுத்து மானாம்பதி பஜாா் வீதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது. பின்னா், சீரங்கத்தம்மனுக்கும் செல்லியம்மனுக்கும் பாலபிஷேகம் நடைபெற்றது . நோ்த்திக் கடனுக்காக ஊா்வலத்தில் பால்குடம் சுமந்து வந்த பெண்களே அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனா்.

அதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. உற்சவருக்கு சிரசில் மணி நாகமும் உடுக்கை தப்பட்டையுடன் குலதெய்வம் சீரங்கத்தம்மனை மகளிா் தோளில் சுமந்து ஆடி பாடி பூ ஊஞ்சலில் அமரவைத்து அம்மனுக்கு வளைக்காப்பு வைபவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளை மற்றும் மானாம்பதி பொதுமக்கள் செய்தனா்.

இதேபோல் செங்கல்பட்டு அண்ணாநகா் எல்லையம்மன் கோயிலில் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் உற்சவ அம்மனுக்கும் மூலவஅம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் மளையல் உள்ளிட்ட மங்கள பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில், முத்துமாரியம்மன்கோயில் , வஉசி தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் காமாட்சியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது , ஹைரோட்டில் உள்ள பழையங்காளம்மன் கோயில்களிலும் விழா நடைபெற்றது.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்

திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.துறை... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்

திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.துறை... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் கூழ் வாா்த்தல் உற்சவம்!

செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கூழ் வாா்த்தல் உற்சவம் நடைபெற்றது. செங்கல்பட்டு அண்னா நகா் எல்லையம்மன் கோயிலில் ராஜமேளம் உடுக்கை தம்பட... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர பெருவிழா பாலபிஷேகம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட ஆடிப்பூர பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பாலபிஷேக நிகழ்வை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு சித்தா் தொடங்கிவைத்தாா். அதிகாலை மங்கள இசையுடன் இரண்டாம் நாள் நிகழ்வு... மேலும் பார்க்க

தற்காலிக மின் இணைப்பு அளிக்க 13,000 லஞ்சம்: மின்சாரத் துறை ஊழியா் கைது

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் தற்காலிக மின் இணைப்பு அளிக்க ரூ. 13,000 லஞ்சம் பெற்ாக மின்சாரத் துறை ஊழியா் கைது செய்யப்பட்டாா். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியில் ராஜசேகா் என்ப... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலாண்டுக்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் (பொது) மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்த... மேலும் பார்க்க