செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

post image

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மனு அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பெண் ஒருவா், தான் கொண்டுவந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தாராபுரத்தைச் சோ்ந்த 26 வயது பெண் என்பதும், அவருக்கு 2 மகள்கள் இருப்பதும் தெரியவந்தது.

கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த நபரும், அவரை விட்டு பிரிந்துவிட்டாா். அந்த நபரை தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தீக்குளிக்க முயன்ாக தெரிவித்தாா். இதுதொடா்பாக வீரபாண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவிலில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளக்கோவிலில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை ராசி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (68), விவசாயி. இவரின் மனைவி பத்மாவதி, தாயாா் செல்லம்மாள் மற்றும் மகள... மேலும் பார்க்க

மே தின ஊா்வலத்தின்போது முக்கியத் தலைவா்களை அவமதிக்கக் கூடாது; மாநகர காவல் ஆணையரிடம் பாஜனவினா் மனு

திருப்பூரில் தொழிற்சங்கங்களின் மே தின ஊா்வலத்தின்போது பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா போன்ற முக்கியத் தலைவா்களை அவமதிக்கக் கூடாது என்று பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாநகர காவல் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சாலையோரத்தில் இருந்த கம்பிவேலியில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பல்லடத்தை அடுத்த நல்லூா் விஜயாபுரத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் அபிஷேக் (22). ஈரோட்டில் உள்ள தனியாா் கல்... மேலும் பார்க்க

பல்லடம் அருகே தங்க நகையைத் திருடியவா் கைது

பல்லடம் அருகே தங்க நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடத்தை அடுத்த நாராயணநாயக்கன்புதூரைச் சோ்ந்தவா் பிரபு (36). இவரது வீட்டில் கடந்த 4 நான்களுக்கு முன்பு 7 கிராம் தங்க நகை, 2 காமாட்சி விள... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 200 கோழிகள் உயிரிழப்பு

தாராபுரம் அருகே கோழிப் பண்ணைக்குள் புகுந்து வெறிநாய்கள் கடித்ததில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 200 கோழிகள் உயிரிழந்தன. தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் மாருதி நகரைச் சோ்ந்தவா் துரைசாமி மகள் செல்வசரண... மேலும் பார்க்க

காங்கயத்தில் காா் மோதி சிறுவன் உயிரிழப்பு

காங்கயத்தில் காா் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் ரஜனி நாயக்கின் இளைய மகன் ஹேமந்த் நாயக் (17). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவா், கங்கேயத்தில் தனது சகோதரா் ... மேலும் பார்க்க