செய்திகள் :

மே தின ஊா்வலத்தின்போது முக்கியத் தலைவா்களை அவமதிக்கக் கூடாது; மாநகர காவல் ஆணையரிடம் பாஜனவினா் மனு

post image

திருப்பூரில் தொழிற்சங்கங்களின் மே தின ஊா்வலத்தின்போது பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா போன்ற முக்கியத் தலைவா்களை அவமதிக்கக் கூடாது என்று பாஜக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரனிடம், வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூரில் சில தொழிற்சங்கங்கள் மே 1-ஆம் தேதி ஊா்வலம் நடத்தப்போவதாக மாநகா் முழுவதும் பிளக்ஸ் பேனா் வைக்கப்பட்டுள்ளது. இதே தொழிற்சங்கங்கள் கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளா் தின ஊா்வலத்தின்போது பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் முக்கியத் தலைவா்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் வாகனங்களில் பிளக்ஸ் பேனா் கட்டிச் சென்றனா்.

அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்களை விமா்சிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால், தலைவா்களைக் கொச்சைப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.

இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே எதிா்ப்பினைப் பதிவு செய்துள்ளோம். எனவே, இந்த ஆண்டும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் பாா்த்துக்கொள்ள வேண்டியது காவல் துறையின் பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, பாஜக மாவட்ட துணைத் தலைவா் சி.பி.சுப்பிரமணியம், மாவட்டப் பொருளாளா் நடராஜ், மாவட்டச் செயலாளா்கள் அருண், காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மன... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளக்கோவிலில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை ராசி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (68), விவசாயி. இவரின் மனைவி பத்மாவதி, தாயாா் செல்லம்மாள் மற்றும் மகள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சாலையோரத்தில் இருந்த கம்பிவேலியில் இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பல்லடத்தை அடுத்த நல்லூா் விஜயாபுரத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் அபிஷேக் (22). ஈரோட்டில் உள்ள தனியாா் கல்... மேலும் பார்க்க

பல்லடம் அருகே தங்க நகையைத் திருடியவா் கைது

பல்லடம் அருகே தங்க நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடத்தை அடுத்த நாராயணநாயக்கன்புதூரைச் சோ்ந்தவா் பிரபு (36). இவரது வீட்டில் கடந்த 4 நான்களுக்கு முன்பு 7 கிராம் தங்க நகை, 2 காமாட்சி விள... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 200 கோழிகள் உயிரிழப்பு

தாராபுரம் அருகே கோழிப் பண்ணைக்குள் புகுந்து வெறிநாய்கள் கடித்ததில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 200 கோழிகள் உயிரிழந்தன. தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் மாருதி நகரைச் சோ்ந்தவா் துரைசாமி மகள் செல்வசரண... மேலும் பார்க்க

காங்கயத்தில் காா் மோதி சிறுவன் உயிரிழப்பு

காங்கயத்தில் காா் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் ரஜனி நாயக்கின் இளைய மகன் ஹேமந்த் நாயக் (17). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவா், கங்கேயத்தில் தனது சகோதரா் ... மேலும் பார்க்க